
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வந்து சேர்ந்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.55 அடியாகவும், நீர் இருப்பு 36.74 டிஎம்சியாகவும் உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடித்தது.