காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆகஸ்ட் 13-ம் தேதி ஆணையத்தின் 55-வது அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில், கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரைப் பெறுவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும் நீர் பங்கீடு குறித்த தமிழகத்தின் கோரிக்கைகளை ஆணையம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.