
ஐடி நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தேக்கநிலையைச் சந்திப்பதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் மனித ஆற்றலுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களுக்கு அதிக நிதியைச் செலவிடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மென்பொருள் துறை அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளதால் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாகவும், இது எதிர்காலத்தில் பெரிய பொருளாதார சவாலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.