
இந்தியாவின் இரண்டாவது காலாண்டு ஜி.டி.பி 7.8 சதவீதமாக வளர்ந்துள்ளது என்றும் இது ஆய்வாளர்களின் கணிப்புகளை விட அதிகமாகும் என்றும் ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.
சேவை மற்றும் ஏற்றுமதித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டதே இந்த எதிர்பாராத பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என ஐ.எம்.எப் செய்தித்தொடர்பாளர் ஜூலி கொசாக் கூறியுள்ளார்.
எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் மீள்தன்மை கொண்டதாகவே திகழ்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.