
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த 'ரீஸ்கோ' கச்சா எண்ணெய் கப்பல் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 21 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது, வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.