மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக்கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆங்கிலம் இந்திய மொழி இல்லையா என்றும், 22 மொழிகளுக்கு ஆசிரியர்களை எப்படி நியமிப்பீர்கள் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.