
பிரித்தானியாவில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் காரணமாக, அந்த நிலையம் நான்கு நாட்கள் முழுமையாகச் செயலிழந்தது.
டெலிகிராப் செய்தி நிறுவனத்தின்படி, இது பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலாகக் கருதப்படுகிறது, இருப்பினும் நாட்டின் ஒட்டுமொத்த மின் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் நிலையில், அரசு மின் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அவசர அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.