
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மூலதனத்தை முதலீடு செய்ய டாடா சன்ஸ் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
2026 நிதியாண்டில் ஏர் இந்தியாவின் இழப்பு ரூ.22,238 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், நிறுவனத்தின் கடன் சுமை சுமார் ரூ.40,000 கோடியாக அதிகரித்துள்ளது.
ஏர் இந்தியாவில் டாடா சன்ஸ் 73.8% பங்குகளையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 24.7% பங்குகளையும் கொண்டுள்ள நிலையில், இந்த முதலீடு முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டது.