
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி, ஆய்வாளர்களின் கணிப்புகளை விட அதிகமாக 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சேவை மற்றும் ஏற்றுமதித் துறைகளின் சிறப்பான செயல்பாடே இந்த எதிர்பாராத வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக ஐ.எம்.எப். செய்தித்தொடர்பாளர் ஜூலி கொசாக் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாகவும், இந்தியா உலகின் மிக முக்கியமான வளர்ச்சி மையமாக திகழ்வதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.