
கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 18 வயதான இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலேமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அனாஹத் சிங், இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வரலாற்றில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
2011 முதல் 13 ஆண்டுகளாக உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுவந்த எகிப்தின் ஆதிக்கத்தை அனாஹத் சிங் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.