
செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது உருவம் மற்றும் குரல் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஸ்ருதி ஹாசன் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி போலி விளம்பரங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்களிடமிருந்து ரூ. 15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.