
மும்பையைச் சேர்ந்த 29 வயது டி.வி. நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் மாமியார் மீது வரதட்சணை மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக கோரேகாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது ஆடை குறித்து கணவர் குறை கூறியதுடன், நடத்தையில் சந்தேகப்பட்டு ஆபாசமாகத் திட்டியதாக நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் நடிகையின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.