
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்ததை அடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்திற்கு அப்பகுதி வாழ் மீனவர்கள் மற்றும் 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்துத் தங்களது படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் முற்றிலுமாகப் பாதிக்கும் எனவும், அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய அளவிலான வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என மீனவர் சங்கத் தலைவர் எச்சரித்துள்ளார்.