
1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் வெளியான 'கலியுக பண்டவுலு' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான குஷ்பு, தனது 40 ஆண்டுகால பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
15 வயதில் தென்னிந்தியாவிற்கு வந்த தான், இன்று தனது வாழ்க்கை மற்றும் குடும்பத்தை இங்கே அமைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது திரையுலகப் பயணத்தில் உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும், நண்பர் வெங்கடேஷுக்கும் அவர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.