
எண்ணூர் முகத்துவாரத்தில் 2,150 கிலோ மீன்கள் இறந்து கிடந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமல்ல, நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே முதன்மைக் காரணம் என அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மனிதக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுநீர் கலப்பு காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், நீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.