
இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் போது, வர்ணனையாளர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் நேரலையிலேயே ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முக பாவனைகள் குறித்து முரளி கார்த்திக் விமர்சித்ததற்கு, கண்ணாடி முன்னால் நின்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் நபர் நீங்கள் என்று மஞ்ச்ரேக்கர் பதிலடி கொடுத்தார்.
இந்த விவாதம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களுடன் திணறி வருகிறது.