
மும்பை ஐ.ஐ.டி.யில் சாட் ஜி.பி.டி. மூலம் தேர்வில் காப்பியடித்ததாகக் கூறப்பட்ட பி.டெக். மாணவர் சாகில் வகோடே விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி சக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துறைப் பேராசிரியர்களின் ராஜினாமாவையும் வலியுறுத்தினர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக மும்பை ஐ.ஐ.டி.யில் செமஸ்டர் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.