
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் மற்றும் உச்சத் தலைவர் காமேனி இடையே அமெரிக்காவுடனான மோதல் குறித்த கொள்கை முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்காவுடனான மோதலை எதிர்கொள்வதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) செல்வாக்கு அதிகரித்துள்ளதால், அதிபர் பெஷெஷ்கியன் பதவி விலகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கத்தார் மற்றும் பாகிஸ்தான் வழியாகத் தொடர்வதாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது.