
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மனநலம் குன்றிய பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், பேங்க் ஆஃப் அமெரிக்கா துணைத் தலைவர் எரின் பியாசென்டி (32) உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய பெண் 68 வயது முதியவர் உட்பட இருவரைத் தாக்கிய நிலையில், காவல்துறையினரால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகள் இருந்ததாக அவரது சகோதரர் பேட்ரிக் பெரால்டா தெரிவித்துள்ளார்.