
பழநி தண்டபாணி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மடத்தின் நிர்வாகி மற்றும் வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீனை ரத்து செய்ததைத் தொடர்ந்து, கொடைக்கானலில் பதுங்கியிருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.