Indian Politics
எம்.எல்.ஏ. ராஜினாமா: இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

எம்.எல்.ஏ. ராஜினாமா: இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

Dinamalar22h
THE BRIEF
1

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரவும், தேர்தல் செலவுகளை அவர்களிடம் வசூலிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2

அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயகுமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக பதவியை ராஜினாமா செய்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

3

இவர்களது ராஜினாமாவால் அரசுகளுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் தேவையற்ற பளுவும் பண விரயமும் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.