
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழியைச் சேர்ந்த ராம்குமாரின் 3 மகன்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ 440 மதிப்பெண்களுடன் நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், இரட்டையர்கள் அருண் 511 மற்றும் தரண் 494 மதிப்பெண்களுடன் முறையே திருநெல்வேலி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த 3 சகோதரர்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.