
மியான்மரின் ஸ்வெல்லேஓ கிராமத்தில் உள்ள பவுத்த மடாலயம் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
தியான பயிற்சியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தபோது, ஜெட் விமானங்கள் 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மியான்மரில் ராணுவம், ஜனநாயக ஆதரவு படைகள் மற்றும் இன ஆயுதக்குழுக்களுக்கு இடையே நடக்கும் தொடர் மோதல்களால் பொதுமக்கள் உயிரிழக்கும் சூழல் நீடிக்கிறது.