
தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று நள்ளிரவு 1 மணியளவில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பரினகொச்சோஸ் மாகாணத்தின் உபஹசொ நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில், 66 கி.மீ. ஆழத்தில் அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் மையம் கொண்டிருந்தது.
ஐகா மற்றும் ஆர்கியுபா நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.