
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் விருப்பமனுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை செப்டம்பர் 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிமுக அறிவித்துள்ளது.