
கரூரில் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.