
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை கண்டித்து, செப்டம்பர் 12-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுக தலைவர்கள் மற்றும் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், ஆட்சி நிர்வாகத்தில் தோல்வி அடைந்துள்ளதாகவும் திமுக தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.