
15 வயதில் கிரிக்கெட்டில் சாதனை படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி 2026 ஐபிஎல் சீசனில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன், 72 சிக்சர்களை அடித்து கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார்.
அவரது வயது குறித்த சர்ச்சை உலகளவில் பேசப்பட்டாலும், அவர் ஒரு சிறந்த வீரர் என்றும் இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.