
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய துலீப் டிராபி இறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணியின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
முதல் 10 ஓவர்களிலேயே கிழக்கு மண்டல அணி 70 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்த நிலையில், வைபவ் மிலிந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் அரைசதம் கடந்த நிலையில், 16 ஓவர்கள் முடிவில் கிழக்கு மண்டல அணி 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.