ஒலிம்பிக்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் பாதிக்கும் குறைவானவற்றில் மட்டுமே இந்தியா பங்கேற்பதாகக் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
2012 ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அலைச்சறுக்கு மற்றும் மலை ஏறுதல் போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட திறமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நவீன விளையாட்டு அறிவியல் மற்றும் பயிற்சி அளிக்க அரசு உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.