
போலாந்தின் கடன்ஸ் நகரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி, கதவுகள் மூடப்பட்டதால் சிக்கிக்கொண்ட நிலையில், அதன் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
ஹிடினா நகரில் இருந்து சிலோனா கொரா நகருக்கு வந்த ரெயில் மோதியதில் லாரியின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.