
சாதம், நாண், பூரி போன்ற அதிக மாவுச்சத்து மற்றும் கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பழச்சாறுகளில் நார்ச்சத்து குறைவு என்பதால், அவற்றை தவிர்த்து முழுப் பழங்களை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.
வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஆரோக்கியமானது என்றாலும், அவை சர்க்கரையைப் போலவே கலோரிகளை வழங்குவதால் நீரிழிவு உள்ளவர்கள் அவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.