
திண்டுக்கல் நத்தத்தில் நடந்த டிஎன்பிஎல் லீக் போட்டியில், நெல்லை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 206/8 ரன்கள் எடுத்த நிலையில், திருப்பூர் அணி 18.1 ஓவர்களில் 207/2 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா 90 ரன்களுடனும், சாய் கிஷோர் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர்.