
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய வுஷு அணியில் இருந்து 18 வயதான திவ்யான்ஷி நீக்கப்பட்டதை அடுத்து, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுக்கான போட்டியில் ரோஷிபினா தேவியை வீழ்த்தியிருந்த போதிலும் தனக்கு இடம் மறுக்கப்பட்டதாக திவ்யான்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.
திவ்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டதாகவும், போட்டிக்கு தன்னை தயார்படுத்தும் வகையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் வுஷு பெடரேசன் தெரிவித்துள்ளது.