புதுச்சேரி முதல்வரின் சுதந்திர தின உரை, அரசின் சாதனைகளை பட்டியலிடும் தேர்தல் அறிக்கை போல இருந்ததாக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் 2047-ம் ஆண்டிற்கான விக்சித் பாரத் இலக்கு மற்றும் புதுச்சேரியின் பங்களிப்பு குறித்த தொலைநோக்கு திட்டங்கள் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியலை மட்டுமே முதல்வர் வழங்கியதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.