
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை பருவமழை தொடங்கும் முன் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கும் இடங்களில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வாரம் இருமுறை ஆய்வு செய்து, நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.