
அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி உயர்வால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறுவதால், செப்டம்பர் நடுப்பகுதி வரை சுமார் ரூ.14,475 கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
செலாவணிச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏறக்குறைய ரூ.96 எனச் சரிந்துள்ளதால், இறக்குமதி மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.