
அமெரிக்காவில் ஆயுதக் கையிருப்பு பற்றாக்குறை தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹெக்சேத் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான இச்செய்தி, நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் பற்றாக்குறை குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இச்செய்தி 100 சதவீதம் பொய்யானது என்றும், ஹெக்சேத் மீது அதிபர் உயர்ந்த மரியாதையை வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.