தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,11,720 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்குள் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுமாறு பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.