
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிகள் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 349 இடங்களைக் கொண்ட ரிக்ஸ்டாக் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 176 இடங்களையும், ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் 173 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தேர்தல் தோல்தியை அடுத்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், மக்டலேனா ஆண்டர்சன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.