/nakkheeran/media/media_files/2026/09/17/anbilccb-2026-09-17-10-49-44.jpg)
கடந்த திமுக ஆட்சியின் போது லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 118 ஆவணங்கள், 18 செல்போன்கள் மற்றும் 3 மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 18ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.