
கிரீஸின் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்துக்குள்ளான ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இரண்டு விமானப்படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் காட்டுத்தீயால் சுமார் 3.5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.