
பெங்களூருவை சேர்ந்த வாக்ஸல்கிரிட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும் வகையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு எம்ஆர்ஐ மெஷினை தயாரித்துள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்த இந்த நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்க முயன்றபோது, ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு முதலீடு செய்து காப்பாற்றினர்.
மின்சாரப் பொறியாளர் அர்ஜுன் அருணாச்சலம் வடிவமைத்துள்ள இந்த மெஷின் 40% குறைந்த விலையிலும், ஹீலியத்திற்கு பதிலாக நைட்ரஜனை பயன்படுத்துவதால் ஸ்கேன் கட்டணத்தை 70% வரையும் குறைக்கும்.