
இந்தியா-ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு நட்புறவைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 22-ம் தேதி ஜப்பானின் சனோ நகரில் முதல்முறையாக டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இரு நாட்டு பிரதமர்கள் மோடி மற்றும் சனாயே டகாய்ச்சி இணைந்து எடுத்த 'ஸ்போர்ட் 75' ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 'சுஜுகி கோப்பை' என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா செப்டம்பர் 28-ம் தேதி காலிறுதியில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தப் போட்டி பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.