திருவாரூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 31 தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டதை கண்டித்து, அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை குளம், குட்டைகளில் குப்பைகள் அள்ளுதல் மற்றும் சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
நகராட்சி கமிஷ்னர் சுரேந்திரஷா தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.