
முதல்வரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 20-ம் தேதி கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும், கைதுக்கு முன் இருமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறி நோட்டீஸ் இன்றி கைது செய்ததாக மனுதாரர் தரப்பு வாதிட்ட நிலையில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.