
89 வயதான நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட், ரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு மாளிகை இன்று (ஆக. 27) அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மன்னர், சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் ஓய்வில் இருப்பதால், அவரது மகனும் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் தற்போது அரசுப் பிரதிநிதியாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.