பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, தேவாலயத்திற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்த நிலையிலும் மணமக்கள் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இயற்கை பேரிடர் காலத்திலும் நம்பிக்கையை இழக்காமல் நடந்த இந்தத் திருமணம், அந்தப் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ள பாதிப்புகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மணமக்களின் இந்தச் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.