இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்த, இந்திய அரசாங்கம் 500 லிட்டர் தொழில்நுட்பத் தரத்திலான மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவா, இந்த மருந்தை சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
நுளம்புகள் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொண்டுள்ளதால், அதிக அபாயம் உள்ள பகுதிகளில் புகை தெளிப்புத் திட்டங்களுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.