
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது.
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டு, 1,28,499 மோதிரங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ், ஜூன் 22-ம் தேதி பிறந்த குழந்தைகள் முதல் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.